நேற்று கொழும்பு மஜஸ்டிக் சினிமாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன். கல கலவென ரஜனி திரைப்படம் பார்ப்பது போல இருந்தது. இக் கதை 1950 களில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. ரசிய இரகசிய உளவாளிகள் இந்தியானா ஜோன்ஸைப் பயன்படுத்தி அதிசய சக்தியை பெற முயல்கின்றனர். அவர்கள் அதைப் பெற்றார்களா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை.திரையரங்கில் ஒரே குழந்தைகளாக இருந்தது, குழந்தைகளுடன் குழந்தையாக நானும் இருந்து திரைப்படத்தைப் பார்த்தேன். காட்சிக்கு காட்சி விறு விறுப்பாக நகர்வதுடன், மிக முக்கியமாக கதிரை நுனியில் உட்கார வைக்கும் காட்சியில் கூட காமெடி கலந்து கலக்கியிருக்கிறார்கள்.
குடும்பமாக சென்று வார இறுதியில் பார்க்க நல்ல திரைப்படம் ஒன்றைத் தேடுகின்றீர்கள் என்றால், இந்த திரைப்படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.
try Kungfu Panda
பதிலளிநீக்குஇண்டியானா ஜோன்ஸ் -4 மொக்கையாவே இருந்தாலும் பார்த்துடறதுங்கற முடிவுல இருக்கோம்ல... :))
பதிலளிநீக்குஆனாலும் 3 வது படம் அளவு வருமாங்கற சந்தேகம் இன்னும் இருக்கு.:( அதுல சீன் கானரி கலக்கியெடுத்துருப்பாரு :))
இலங்கையில் குங்பு பண்டா இன்னமும் தியட்டருக்கு வரவில்லை... :(
பதிலளிநீக்குஆமாம் சென்ஷி...!! நீங்கள் சொல்வது சரிதான்!