செவ்வாய், ஜூலை 15, 2008

The Number 23 (2007) திரைவிமர்சனம்

Your Ad Here

எண்கள் வினோதமானவை. அவை மனிதனின் அபரிதமான வளர்ச்சியில் அரும்பங்காற்றின. எண்கள் இல்லாவிட்டால் இன்று பல கோட்பாடுகள் கொள்கைகள் இல்லாமலே போயிருக்கும். காட்டில் மனிதன் வேட்டையாடித் திரிந்திருப்பான். இவ்வாறு வினோத குணவியல்புகொண்ட இலக்கம் 23, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்த்தும் நிகழ்வுகளே இந்த 23 எனும் திரைப்படம்.

வோல்டர் ஸ்பரோவ் அவனது பெயர். இவன் தொழில் நகர்பகுதியில் கட்டாக்காலியாகத் திரியும் நாய்களை பிடிப்பது. இவனது பிறந்தநாள் அன்றும் இவ்வாறு ஒரு நாய் பின்னால் சென்று அதனால் நேரம் பிந்தி அவனது மனைவியை காணச் செல்கின்றான். இவன் வரும் நேரம் பிந்தியதால் இவன் மனைவி அந்த நேரத்தில் புத்தக கடையில் ஒரு பழைய புத்தகம் ஒன்றை வாங்குகின்றாள். இரத்த சுவப்பில் எழுதப்பட்ட ஒரு மர்ம நாவல் அது அந்த நாவலின் பெயர் 23.

இந்த நாவலைப் பெறும் ஸ்பரோவ் அதனை வாசிக்கத் தொடங்குகின்றான். வாசிக்கும் போது மெல்ல மெல்ல அது தன் கதை போல இருப்பதை உணர்கின்றான். இதனை தன் மனைவி, மகனிடம் சொல்கின்றான். ஆரம்பத்தில் அவர்கள் இவன் சொல்வதை அவ்வளவாக அசண்டை செய்யாவிட்டாலும். மெல்ல மெல்ல இவன் நடத்தையில் சந்தேகம் கொள்கின்றனர்.

இந்தப் புத்தகம் ஒரு கொலைகாரனைக் கண்டறிய உதவுகின்றது. அத்த்துடன் இந்தப் புத்தகம் ஒரு தற்கொலைக் கடிதம் என்பதையும் அறிகின்றனர். தற்கொலைக் கடிதத்தை நாவலாகப் பிரசவித்துவிட்டு ஒருவன் தற்கொலை செய்கின்றான்.

இதற்கு மேல் ஒரு வரி எழுதக்கூட எனக்கு விருப்பமில்லை. நீங்களே திரைப்படத்தைப் பாருங்கள். நிசத்தில் நடக்கும் கதை, நாவலில் வரும் கதை உண்மையில் நடந்த கதை என 3 கதைகள் திரைபடத்தினுள் உள்ளடங்கியுள்ளது.

மண்டையைப் பிய்த்து பிய்து சைக்கே திரில்லர் பார்க்க விருப்பம் என்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள். நிச்சயமாக ஒரு அருமையான திரைப்பட அனுபவம் கிடைக்கும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு