திங்கள், ஜனவரி 18, 2010

அவதார் கோல்டன் குளோப் விருதையும் தட்டியது

Your Ad Here

அவதார் காய்ச்சல் உலகம் எங்கும் குறைந்தபாடே இல்லை. தொடர்ந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏன் வேட்டைக்காரன் கூட ஓடுகின்றது தானே? என்று நீங்கள் கேட்கலாம்..ஆனால் வெறும் தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் மக்கள் நிறைந்த தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா??

கோல்டன் குளோப் விருதைத் தொட்டால் அனேகம் ஆஸ்கார் விருதுகளையும் எட்டிவிடலாம் என்பது பல காலமாக நடந்துவரும் விடையம்தான். தற்போது கோல்டன் குளோப் விருதை அவதார் தட்டிச்சென்றுவிட்டது.

இன்று நடந்த நிகழ்வில் அதைவிட இயக்குனர் ஜேம்ஸ் கமரோனுக்கு சிறந்த இயக்குனருக்கான கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.

Avatar asks us to see that everything is connected, all human beings to each other, and us to the Earth. And if you have to go four and a half light years to another, made-up planet to appreciate this miracle of the world that we have right here, well, you know what, that's the wonder of cinema right there, that's the magic,'
என்று கூறி தனது விருதினை ஏற்றுக்கொண்டார்.

ஆஸ்கார் வெற்றிக் கனிகளை அவதார் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கமரோனின் டைட்டானிக் திரைப்படம் 1998ல் 11 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்றதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

வசூலிலும் விரைவில் டைட்டானிக்கின் வசூலை எட்டிப்பிடித்துவிடுவதாக அவதார் மிரட்டிக்கொண்டுள்ளது. ஐந்து வாரங்களாக தொடர்ந்து அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் அவதார் திரைப்படம் முன்நிலையில் உள்ளது.

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு