புதன், ஜனவரி 20, 2010

Zombieland (2009)

Your Ad Here

இந்த சொம்பி (Zombie) என்ற எண்ணக்கருவை வைத்துப் பல திகல் திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் Rsident Evil, The Legend போன்ற திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் வரும் அதே சொம்பிகள்தான் இந்த திரைப்படத்திலும் ஆனால் ஒரு வித்தாயாசம், நான் அறித்தவரை இதுதான் சொம்பிகளை வைத்து எடுத்த முதலாவது காமடித் திரைப்படம். காமடித் திரைப்படமா, இல்லை திகில் திரைப்படமா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே திரைப்படம் கல கலவென்று முடிந்துவிடுகின்றது.




வழமைபோல ஹொலிவூட் பாலா சொல்கின்ற கனடாவில் தொடங்கி மெக்சிக்கோவில் முடிகின்ற உலகத்தில் இருக்கும் மானிடர்கள் பலரும் சொம்பி தாக்குதலில் தாங்களும் சொம்பி ஆகிவிட எஞ்சியிருக்கும் சில மானிடர்களின் சிரிப்புச் சாகசமே இந்தத் திரைப்படம்.

Columbus என்று ஒரு பொடியன் அவனுக்கு எதைக் கண்டாலும் பயம். அதிலும் கோமாளியைக் கண்டால் இன்னும் பயம். ஆமாம், தேனாலி கமல் மாதிரி. அதனால் சொம்பித் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனக்கு தானே பல விதிகளை வகுத்துக்கொள்கின்றான். உதாரணமாக காரில் ஏறும் போது பின் ஆசனத்தில் சொம்பி இருக்கின்றதா என்று பார்த்தல், இரண்டுக்குப் போகும் போது கையில் துப்பாக்கியுடன் இருத்தல், முதல் தடவை சொம்பியை சுட்டாலும் இரண்டாம் தடவையும் மண்டையை குறிபார்த்துச் சுடதல் போன்றவையடக்கம். அதைவிட எப்போதும் ஹீரோவாக ரை பண்ணாதே என்கிறதும் ஒரு முக்கியமான விதிமுறை.

இந்த கொலம்பஸ் தன் தாய் தந்தையர் இருக்கும் அமெரிக்காவின் கிழக்குத் திசை நோக்கிப் பயனிக்கின்றான், அவனுடன் இணையும் எதற்கும் அஞ்சா ஒரு மனிதன் மற்றும் திருட்டு தண்டா செய்யும் 2 பெண்கள்.

அப்புறம் அந்த திருட்டுத் தண்டா செய்யும் ஒரு பெண்ணுடன் நம்மவர் காதலில் விழுவார் என்பதையும் நான் சொல்லியா உங்குளுக்குத் தெரியவேண்டும்.

இவர்கள் எவ்வாறு ஒருத்தருக்கு ஒருவர் அறிமுகம் ஆகின்றார்கள், இவர்களின் பயனம் போன்றவற்றை மையப்படுத்தி கதை மிகுதி நகர்கின்றது.

IMDB: 79/100
Mayu: 50/100

லேபிள்கள்: ,

திங்கள், ஜனவரி 18, 2010

அவதார் கோல்டன் குளோப் விருதையும் தட்டியது

Your Ad Here

அவதார் காய்ச்சல் உலகம் எங்கும் குறைந்தபாடே இல்லை. தொடர்ந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏன் வேட்டைக்காரன் கூட ஓடுகின்றது தானே? என்று நீங்கள் கேட்கலாம்..ஆனால் வெறும் தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் மக்கள் நிறைந்த தியட்டரில் படம் ஓட்டுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா??

கோல்டன் குளோப் விருதைத் தொட்டால் அனேகம் ஆஸ்கார் விருதுகளையும் எட்டிவிடலாம் என்பது பல காலமாக நடந்துவரும் விடையம்தான். தற்போது கோல்டன் குளோப் விருதை அவதார் தட்டிச்சென்றுவிட்டது.

இன்று நடந்த நிகழ்வில் அதைவிட இயக்குனர் ஜேம்ஸ் கமரோனுக்கு சிறந்த இயக்குனருக்கான கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.

Avatar asks us to see that everything is connected, all human beings to each other, and us to the Earth. And if you have to go four and a half light years to another, made-up planet to appreciate this miracle of the world that we have right here, well, you know what, that's the wonder of cinema right there, that's the magic,'
என்று கூறி தனது விருதினை ஏற்றுக்கொண்டார்.

ஆஸ்கார் வெற்றிக் கனிகளை அவதார் பறிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கமரோனின் டைட்டானிக் திரைப்படம் 1998ல் 11 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்றதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

வசூலிலும் விரைவில் டைட்டானிக்கின் வசூலை எட்டிப்பிடித்துவிடுவதாக அவதார் மிரட்டிக்கொண்டுள்ளது. ஐந்து வாரங்களாக தொடர்ந்து அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் அவதார் திரைப்படம் முன்நிலையில் உள்ளது.

லேபிள்கள்: , ,

ஞாயிறு, ஜனவரி 10, 2010

அவதார் பாகம் II விரைவில்

Your Ad Here

உலகம் எங்கும் சக்கைபோடும் அவதார் திரைப்படம் பற்றி நமது வலையுலக நண்பர்கள் பதிவிட்டு பிய்த்து மேய்ந்துவிட்டதால் அந்த முயற்சியில் இறங்க அடியேன் முயற்சிக்கவில்லை. ஆயினும் இன்றுதான் அடியேனுக்கு அவதார் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. டிசம்பர் 23ம் திகதியே கொழும்பில் அவதார் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டாலும் சன நெருக்கடி காரணமாக இன்றுதான் சென்று பார்க்க கிடைத்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காய்க்கும் வெயிலில் நின்றுதான் திரைப்படம் பார்க்கவேண்டியிருந்தது. கொழும்பின் மேட்டுக்குடிகளும் காய்ச்சும் வெயிலிலும் காத்து நின்று திரைப்படம் பார்த்தது வியப்பாக இருந்தது. திடீர் என்று எங்கோ இருந்து முளைத்த சிறிய பொண்ணு ஒன்று "So you all wanna see some freaky aliens..huh?" என்று நீண்டு நெளிந்து வளைந்து சென்ற வரிசையைப் பார்த்து சொல்லிக்கொண்டு சென்றது.

அட சரி அதை விடுங்க மாட்டருக்கு வாங்க. அவதார் படம் வெளியிடப்படும் போது அவதார் 3 பாகங்களை எடுக்குமளவிற்கு தன்னிடம் கதையிருப்பதாக ஜேம்ஸ் கமரோன் தெரிவித்திருந்தார் ஆயினும் அப்போது அந்த திரைப்படம் எப்படி ஓடப்போகின்றது என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. இன்றய தேதியில் அவதார் திரைப்படம் வசூலை அநியாயத்திற்கு அள்ளிவாரிவிட்டது (சுமார் $1,131,752464).

இந்த வேளையில் ஜேம்ஸ் கமரோன் "Yes, there'll be another." என்று நான்கு வார்த்தையில் பல இரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்துவிட்டார்.

அடுத்த பாகத்தில் கதை என்னவாக இருக்கும் என்று அமெரிக்க தொலைக்காட்சிகளும் வலைத்தளங்களும் யோசிக்கத் தொடங்கியுள்ளன. இதில் சிலர் அடுத்த பாகம் பன்டோராவைவிட்டு அதன் வெளியே நடக்கும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக பண்டோராவின் சந்திரன்களின் நடைபெறலாம் என்று கூறுகின்றனர்.

சிலர் கருத்து தெரிவிக்கையில், முதலாம் பாகத்தில் மரத்தில் வாழும் நாவி இனத்தவரைத்தான் இந்த திரைப்படத்தில் காட்டுகின்றார்கள். ஆனாலும் இறுதி யுத்தத்தில் பல உள்ளூர் நாவி இனத்தவர்கள் ஒன்றினைகின்றனர். உதாரணமாக குதிரை வீரர்கள், பறவைகளில் பறந்து வரும் இனம் என்று பல இருக்கின்றனர். இவர்களின் உள்ளூர் அரசியல் என்ன போன்றவை பற்றி பாகம் ஒன்றில் குறிப்பிடப்படவில்லை ஆகவே இது பற்றி இரண்டாம் பாகத்தில் மேலும் கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதைவிட தோற்று ஓடிய மனித குலமும் RDA வும் மீள பண்டோராவிற்கு வரலாம். அவர்கள் நாவி இனம் மீது தொடுத்த போரின் நோக்கமே அங்கிருக்கும் சில கணிமங்களைத் திருடவே. அதைப் பெற படை பெருக்கிக்கொண்டு மீள மனிதர்கள் வந்து நாவிகளைத் தாக்கலாம்.

எது எப்படியோ இனி ஜேம்ஸ் கமரோன் விட்ட வழியேதான். அவர் என்ன செய்து காட்டப்போகின்றார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.

I loved the first film and I hope the sequel will be just as good.

லேபிள்கள்: , ,