21 (2008) விமர்சனம்


அதி புத்திக் கூர்மையுள்ள ஆறு M.I.T மாணவர்களை சுற்ற நடக்கும் கதையிது. பென் கம்பெல் எனும் மாணவன், ஹாவாட் மருத்துவ பாடசாலையில் சேர்ந்து படித்து எதிர்காலத்தில் வைத்தியராக விரும்புகின்றான். இதற்காக பலமாக படிப்பில் கவனம் செலுத்தி அதிக திறமையுள்ள மாணவனாகின்றான். சாதாரண குடும்பத்தில் பிறந்த பென் கம்பெலுக்கு 300,000 செலுத்தி ஹவார்ட் பாடசாலையில் சேர்வது கனவாகின்றது. ஆகவே அதற்காக ஒரு புலமைப் பரிசிலுக்கு முயற்சிக்கின்றான். ஆயினும் வித்தியாசமான வழமைக்கு மாறான ஒரு மாணவனுக்கு அந்த புலமைப்பரிசிலை வழங்கவே ஹவார்ட் நிர்வாகம் முயற்சிக்கின்றது.

முதலில் ஹவார்ட் பணத்திற்காக லாஸ் வெகாஸ் சென்று சூதாடினாலும் (card counting at blackjack) நாளடைவில் சூதாட்டத்தில் அவன் மனம் ஒன்றி அதில் முழுக் கவனம் செலுத்துகின்றான். இவர்கள் 6 பேரும் சேர்ந்து பெரும் பணம் செய்கின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50 வீதம் இவர்களை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பேராசிரியருக்கு கொடுக்க வேண்டும் என்பதே பேராசிரியரின் கட்டளை.
ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகச் சென்றாலும் பேராசிரியர் மைக்குடன் சச்சரவு ஏற்பட்டு பென் அந்த கழகத்தில் இருந்து நீக்கப்படுகின்றான். அத்துடன் அதுவரை அவன் தன் ஹவார்ட் படிப்பிற்காக சேர்த்திருந்த பணத்தையும் மைக் களவாடி விடுகின்றான்.
இதன் பின்னர்தான் கதையின் முக்கியமான நிகழ்வுகள் நடக்கின்றன. படத்தை நீங்கள் பார்த்து என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

ஹவார்ட், MIT எல்லாம் எங்களுக்கு எட்டா உயரத்தில் உள்ள உலகத் தரத்திலான பல்கலைக் கழகம் அவற்றை திரைப்படத்திலாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததே!!!
அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத, இறுதியில் மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டும் திரைப்படம்.
லேபிள்கள்: திரைவிமர்சனம்